" alt="" aria-hidden="true" />
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 6ம்தேதி நடைபெறுமென தென்காசி ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 6ம் தேதி தென்காசியில் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் வரும் 6ம் தேதி காலை 10.30.மணி அளவில் தென்காசி சுபம் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காலிப்பர், ஊன்றுகோல், சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, மடிக்கணினி, பார்வையற்றவர்களுக்கு கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல், பிரெய்லி கைக் கடிகாரம், வீடியோ உருப்பெருக்கி, செயற்கை கால் மற்றும் செயற்கை கை, இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, சுயவேலைவாய்ப்பு வங்கிக்கடன், பேருந்து பயண கட்டண சலுகைகள், பராமரிப்பு உதவித்தொகை, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம்,தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி தொழிற்பயிற்சி மையம், மீட்பு திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி தொகை மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரடியாக வழங்கி பயன்பெறலாம் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.